புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மதம், பக்தி, வழிபாடு, கோயில் குளங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் நாட்டில் நடப்பது எல்லாம் நாட்டு மக்கள் மத்தியில் நல்லொழுக்கம் பூத்துக் குலுங்கத்தான் என்று பொதுவாக, வக்கணை யாகக் கூறுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

உண்மையைச் சொல்லப் போனால் இவை யெல்லாம் ஒழுக்கக்கேட்டை வளர்ப்பதற்கும் ஏற்கெனவே செய்த ஒழுக்கக்கேடுகளுக்குக் கழுவாய்த் தேடிக் கொள்ளவும், பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ளவும் திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட வியாபார நிறுவனங்களாகும்.

குறிப்பாக - இந்தியாவில் பிரபலமானதாகக் கூறப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும்; தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் என்றெல்லாம் உச்ச சுதியில் கோஷம் போடுவார்கள்.

ஆனால் அங்கு நடப்பது என்ன? - இரண்டு நாள்களுக்குமுன் வந்த ஒரு சேதி திடுக்கிட வைப்பதாகவும், அருவருக்கத்தக்கதாகவும் உள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருமலை தர்மகிரியில் வேதபாட சாலை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து  வேதம் படித்து வருகின்றனர்.

இங்கு கடந்த 3 ஆண்டுகளாக அய்தராபாத்தைச் சேர்ந்த சீனிவாசலு என்பவரின் மகன் சூரியதேஷா (வயது 11) என்ற சிறுவனும் வேதம் படித்து வருகிறான். ஆனால் அங்கிருந்து அந்தச் சிறுவன் தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறான்.

வேத பாடசாலைக்கு மீண்டும் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்து இருக்கிறான்;  இதற்கான காரணத்தைக் கேட்டு வற்புறுத்தியபோது சிறுவன் அழுதுபுலம்பி உண்மையைச் சொல்லி விட்டான். வேதபாட சாலையில் உள்ள மூத்த மாணவர்களும், ஆசிரியர் களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்துவதாகவும், இதனால் இரவு முழுவதும் தூக்கம்  வராமல் அவதிப்பட்டதாகவும் சிறுவன் தெரிவித்தான்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் திருப்பதி ஏழுமலை தேவஸ்தான நிருவாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது துணை ஆய்வாளர் அமர்நாத் ரெட்டி வழக்கு ஒன்றைப் பதிவு செய்து விசாரித்து வருகிறாராம்.

இதனைப் படிக்கும்பொழுது சீ... இப்படியும் ஒரு இழி செயலா? இதற்கு வேதபாட சாலை என்று பெயரா? இவர்கள் படித்த வேதங்கள் இதைத்தான் சொல்லிக் கொடுக்கின்றனவா? என்ற கேள்வி தானே பிறக்கும்.

உண்மையைச் சொல்லப் போனால் வேதங்கள் விபச்சாரத்துக்குப் பச்சைக் கொடி காட்டுகின்றன - சிவப்பு விளக்குப் பகுதிகளாகவும் இருக்கின்றன. அதற்கு எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.

புத்திரார்த்த நிமித்தம் தாய், தமக்கை, மகள், பிள்ளை என யாருடனும் கூடலாம் என்கிறது
கீழ்க்கண்ட சுலோகம்.

மாதர முனபத்ய சுஸார முனபதி புத்திரார்த்த
சகாமார்த்தி நரபத்திரயோக நாஸ்தீத
ஸர்வம் பரவோ விந்துஹ: தஸ்மாத் புத்ரார்த்தம்
மாதாம், ஸுரஞ்சதி, ரோஹதி
என்பது சுலோகம்.
வேஸ்யா தர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாபாநாஸம்
சும்பனம் சர்வ தீர்த்தானாம்
மைதுனம் மோக்ஷ சாதனம்

பொருள்: வேசியர்களைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவ விமோசனம் கிடைக்கும். முத்தமிட்டால் சகல தீர்த்தத்திற்கும் சமம். புணர்ச்சி செய்தால் மோட்சம் அடைய வழி.

இதுபோன்ற வேத பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் மாணவர்களின் கதி என்ன? சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் தன்மைதான் என்ன?

அரியும் - அரனும் சேர்ந்து பெற்ற பிள்ளை அரிகர புத்திரன் என்று புராணம் எழுதி வைத்துள்ள நாட்டில் (அரியும் ஆண், அரனும் ஆண் இருவரும் புணர்ந்து அய்யப்பனைப் பெற்றனர்) ஓரினப் புணர்ச்சி எப்படி குற்றமாகும்?

முதலில் வேத பாடசாலைகளை இழுத்து மூட வேண்டும்; மூலத்தைவிட்டு விட்டு இலைகளையும், கிளைகளையும் கத்தரித்து என்ன பயன்? சிந்திப்பீர்!

இந்துமத சாஸ்திர, புராண இதிகாசங்களைக் கற்பவர்கள் எவரும் ஒழுக்கத்துடன் வாழ்வது என்பது கடினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக