வெள்ளி, 15 ஜூலை, 2011

இரட்டைமலை சீனிவாசன்


ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமை முரசு கொட்டிய இரட்டை மலை சீனிவாசன் செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்றுதான் பிறந்தார் (1860) அவர் பல வெளி நாடுகளுக்குச் சென்று பொருளீட்டினார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தியார் அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளராகச் சிறிது காலம் பணியாற் றினார்.

1923ஆம் ஆண்டு சட்ட சபை உறுப்பினராக நியமிக் கப்பட்டார். 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணி புரிந்தார்.

அவர்தம் நற்பணிகளுக் காக ராவ்சாகிப், ராவ் பகதூர், திவான்பகதூர் ஆகிய பட்டங்கள் அவ ருக்கு அளிக்கப்பட்ட துண்டு.

1928-1929ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் அண்ணல் அம் பேத்கருடன் பங்கு கொண் டார். தாழ்த்தப்பட்ட மக் களின் பிரதிநிதி என்று காந்தியார் தன்னை அறி முகப்படுத்திக் கொண்ட போது, அம்பேத்கர் அவர் களுடன் சேர்ந்து இரட்டை மலை சீனிவாசன் கடுமை யாக எதிர்க்குரல் கொடுத் தார்.

பறையன் என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.  ஆரியப் பார்ப்பனர் எதிர்ப்பில் மிகத் தெளிவாக வும், உறுதியாகவும் திகழ்ந் தார்.

1895ஆம் ஆண்டில் ஒரு வித்தியாசமான - சுவை யான நிகழ்வு! லண்டனில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அந்த தேர்வில் தேறுகிற வர்கள் - ஆங்கிலேயர்களே! அவர்கள்தான் மாவட்ட ஆட்சியர்களாகவும், நீதிபதி களாகவும் உயர் பதவிகளி லும் வருவார்கள். அந்தத் தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் காங்கிரசார் மசோதா ஒன்றை சமர்ப் பித்தனர். அந்தத் தேர்வு இந்தியாவில் நடந்தால் ஜாதி பார்ப்பனர்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து ஏழை ஜாதியினரைத் தீண் டாதார் என்று இம்சிப் பார்கள்.

அதன் காரணமாக பறையர் மகாஜன சபையார் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு பெருங் கூட்டம் கூட்டி, அந்த மசோதாவை மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப் பங்களைச் சேகரித்து ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னி  என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் சமர்ப் பித்தனர். இதன் மூளையாக இருந்து செயல்பட்டவர். இரட்டைமலை சீனிவாசன் ஆவார். மசோதாவை காங்கிரஸ்காரர்கள் பின் வாங்கிக் கொண்டனர்.

பார்ப்பனர்களின் தன் மைகளைத் துல்லியமாக உணர்ந்ததோடு  - அதனைத் தடுக்க புதிய யுக்தியையும் கையாண்ட இரட்டைமலையாரின் சிந்தனைத் திறனை என் னென்று கூறுவது!
- மயிலாடன்


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக